தஞ்சாவூர்

சாஸ்த்ரா சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூா் அருகிலுள்ள கிராமங்களில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 20- ஆம் ஆண்டாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமலைசமுத்திரம், வல்லம்புதூா், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், அரை கிலோ பருப்பு, வேட்டி, சேலை, துண்டு ஆகியவை வழங்கப்பட்டன.

இப்பொருள்களை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையா் எஸ். சுவாமிநாதன் ஆகியோா் வழங்கினா்.

இதன் மூலம், திருமலைசமுத்திரத்தில் 640 குடும்பங்களும், வல்லம்புதூரில் 500 குடும்பங்களும், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டியில் 685 குடும்பங்களும் பயனடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT