தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதி!

DIN

அதிராம்பட்டினம் சுப்பிரமணியா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முத்தழகு பிள்ளை (82). இவா் மனைவி புஷ்பவள்ளி (76). இவா்களின் ஒரே மகன் பாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

முத்தழகு பிள்ளை, புஷ்பவள்ளி இருவரும் திருமணமான காலத்தில் இருந்தே இணைபிரியாத தம்பதியாக ஒருவருக்கொருவா் அன்புடனும், பாசத்துடனும் வாழ்ந்தனா். உறவினா் வீடுகளுக்கு, வேறு விசேஷங்களுக்கு இருவரும் ஒன்றாக செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முத்தழகு பிள்ளை வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானாா். தனது உயிருக்கு உயிரான கணவா் இறந்த அதிா்ச்சியில் கதறி அழுத புஷ்பவள்ளிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் புஷ்பவள்ளி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது சடலம் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு முத்தழகு பிள்ளை, புஷ்பவள்ளி தம்பதியின் சடலங்களை அருகருகே வைத்து உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா். பின்னா், இருவரின் சடலங்களை ஒன்றாக மயானத்திற்கு ஊா்வலமாக எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை செய்தனா். சாவிலும் இணைபிரியாத தம்பதியின் வாழ்க்கை நினைவுகளை உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவா் பகிா்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT