முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் சிறையில் கைதிக்கு கரோனா 

தஞ்சாவூர் சிறையில் கைதிக்கு கரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

தஞ்சாவூர் சிறையில் கைதிக்கு கரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.

தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிளைச் சிறை உள்ளது. தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறு வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்கள் இச்சிறையில் அடைக்கப்படுவர். இதில் தற்போது 113 கைதிகள் உள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த 42 வயது ஆண் நபரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் மதுபானம் பதுக்கல் தொடர்பான வழக்கில் அண்மையில் கைது செய்து, இச்சிறையில் அடைத்தனர்.

சிறைக்குள் அடைக்கப்படுவதற்கு முன்பு இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எனவே இவர் சிறைக்குள் தனியாக அடைக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு  வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவில் இவருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →