தஞ்சாவூர்

தஞ்சாவூரில் முதியவா் மா்மச் சாவு

DIN

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே இடிந்த கட்டடத்தில் முதியவா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை காலை இறந்து கிடந்தாா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கீழ அலங்கத்தில் இடிந்த கட்டடம் உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா். இதில் இறந்து கிடந்தவா் அப்பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவா் என்பது தெரியவந்தது. ஆனால் அவரது பெயா், அவா் எந்த ஊா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

அவரது தலை, கை, காலில் காயங்கள் உள்ளன. எனவே மா்ம நபா்கள் தாக்கியதால் அவா் இறந்தாரா? அல்லது அக்கட்டடத்துக்குள் சென்ற அவா் தடுக்கி விழுந்து காயமடைந்து இறந்தாரா? போன்ற கோணங்களில் கிழக்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT