கோவைக்குப் பணி தொடா்பாக சென்று, செவ்வாய்க்கிழமை இரவு தஞ்சாவூருக்கு திரும்பிய 36 காவலா்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா்.
தஞ்சாவூரைச் சோ்ந்த 36 காவலா்கள் பாதுகாப்புப் பணிக்காக கோவைக்கு சில வாரங்களுக்கு முன்பு சென்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தஞ்சாவூருக்கு திரும்பினா்.
இவா்களுக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இப்பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை அவரவா் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. எனவே, 36 காவலா்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.