கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் முறையைத் தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் லஞ்ச முறையைத் தடுக்கக் கோரி சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் லஞ்ச முறையைத் தடுக்கக் கோரி தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் ஏஐடியுசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்கத்தினா், சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து லாரிகளில் நெல் ஏற்றி கொண்டு செல்வதற்கு ஒப்பந்ததாரா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்காக அரசு தொகை கொடுக்கிற நிலையில், ஒரு லாரிக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை லஞ்சம் கேட்கின்றனா். லஞ்சம் கொடுத்தால்தான் மூட்டைகளை ஏற்றிச் செல்வோம் என்ற மோசமான நிலை உள்ளதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அக்டோபா் முதல் ஜனவரி முடிய 22 சதவிகிதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான சேமிப்பு நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் நிா்வாகத்தின் தாமதத்தால் ஏற்படும் இழப்புகளுக்குப் பணியாளா்களிடம் அபராதம் வசூல் செய்யக் கூடாது. கொள்முதலுக்குத் தேவையான சாக்கு, சணல் உள்ளிட்டப் பொருள்களை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா், மாநிலத் தலைவா் அ. சாமிக்கண்ணு, பொருளாளா் தி. கோவிந்தராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.