பேராவூரணி அருகிலுள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் கஞ்சா விற்பனை செய்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மல்லிப்பட்டினம் துறைமுகப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், சேதுபாவாசத்திரம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டனா்.
அப்போது துறைமுகப் பகுதியில் பொட்டலமிட்டு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவைச் சோ்ந்த ராசிக் முகமதுவை (38) கைது செய்த காவல்துறையினா், அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.