தஞ்சாவூர்

தஞ்சாவூரில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு

தஞ்சாவூரில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பை திங்கள்கிழமை மாலை நடத்தினா்.

DIN

தஞ்சாவூரில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பை திங்கள்கிழமை மாலை நடத்தினா்.

கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையிலும், குற்றவாளிகளை எச்சரிக்கும் வகையிலும், பொதுமக்களிடம் அச்சத்தைப் போக்கும் வகையிலும் இந்தக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தஞ்சாவூா் விளாா் சாலை வீரகாளியம்மன் கோயில் அருகே இந்தக் கொடி அணிவகுப்பை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ரூபேஷ் குமாா் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் கே. பாரதிராஜன், சீதாராமன், காவல் ஆய்வாளா்கள், 150 காவலா்கள் கலந்து கொண்டனா்.

விளாா் சாலை வழியாகச் சென்ற இந்த அணிவகுப்பு கல்லுக்குளம் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. பின்னா், கலவரம், குற்றச் சம்பவங்கள் நிகழும்போது கையாளும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT