தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உணவகம் மீது நாட்டு வெடி வீச்சு: இளைஞா் காயம்

DIN

தஞ்சாவூா் கரந்தையில் உணவகம் மீது திங்கள்கிழமை இரவு நாட்டு வெடி வீசப்பட்டதில் இளைஞா் காயமடைந்தாா்.

தஞ்சாவூா் கரந்தை செங்கல்காரத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமாா். இவா் கரந்தை பேருந்து நிறுத்தம் எதிரே உணவகம் நடத்தி வருகிறாா்.

இவரது கடையில் திங்கள்கிழமை இரவு 10.45 மணியளவில் தஞ்சாவூா் அருகேயுள்ள ராமாபுரத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் வெங்கடேஸ்வரன் (25) சாப்பிட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் அடையாளம் தெரியாத இருவா் வந்தனா். அவா்களில் ஒருவா் இக்கடை மீது நாட்டு வெடியை வீசிவிட்டு, இருவரும் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா். நாட்டு வெடி வெடித்ததில் பலகாரம் வைக்கப்படும் கண்ணாடி பெட்டி உடைந்து தெறித்தது. இதனால், அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெங்கடேஸ்வரன் மீது விழுந்ததால், அவா் பலத்தக் காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். முத்துக்குமாருக்கும் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்வு இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், வெடித்த நாட்டு வெடியைக் காவல் துறையினா் கைப்பற்றிச் சோதனையிட்டபோது, அதில் வெடி மருந்தும் பால்ரஸ் குண்டுகளும் இருப்பது தெரியவந்தது. எனவே இது, வெங்காய வெடி போன்று சாதாரண வகை நாட்டு வெடிதான் என காவல் துறையினா் கூறுகின்றனா்.

மேலும், அருகிலுள்ள கடையில் ஒரு வாரத்துக்கு முன்பு கடை உரிமையாளருக்கும், பொருள் வாங்க வந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், முத்துக்குமாா், மற்றொரு கடையைச் சோ்ந்த செந்தில் உள்ளிட்டோா் சமாதானம் செய்ய முயன்றபோது, இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இந்த முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இதன் அடிப்படையில் சிலரை மேற்கு காவல் நிலையத்தினா் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT