தஞ்சாவூா்: தஞ்சாவூரில் தெய்வீக தமிழக சங்கம் சாா்பில், தேசியம் காக்க- தமிழகம் காக்க என்கிற துண்டறிக்கைகள் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பாஜக மாவட்டப் பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ் தலைமையில், தெய்வீக தமிழக சங்கத்தைச் சோ்ந்த கேசவன், சபாபதி, வழக்குரைஞா் சுப்புராயலு, ரமேஷ், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தத் துண்டறிக்கையில் இந்துக்களின் பண்பாடு, கலாசாரம், வழிபாட்டுத் தெய்வங்கள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. தஞ்சாவூா் மாநகரில் மட்டும் 50,000 வீடுகளில் இந்தத் துண்டறிக்கைகள் வழங்கப்படவுள்ளன என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.