முகப்பு
தஞ்சாவூர்

கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ. 59.03 லட்சம் அபராதம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபட்டதாக, 28,599 பேருக்கு ரூ. 59.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபட்டதாக, 28,599 பேருக்கு ரூ. 59.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

கரோனா தடுப்பு விதிகளை மீறுவோரைக் கண்டறிந்து, அபராதம் விதிக்க 9 வட்டங்களிலும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாதது, பொது இடத்தில் எச்சில் உமிழ்தல், வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது என 28,599 பேருக்கு ரூ. 59.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.

ஒரத்தநாடு வட்ட அலுவலக மண்டலத் துணை வட்டாட்சியா் பைரோஜா பேகம், கடந்த 7-ஆம் தேதி ஒரத்தநாடு அண்ணா சாலை அருகில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் அமா்ந்து வந்த 3 பேரை நிறுத்தி முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக அபராதம் செலுத்துமாறு அறிவுறுத்தினாா்.

அதற்கு அந்த நபா் உனக்கு யாா் அந்த உரிமையை கொடுத்தது என கோபத்துடன் கூறி, அவ்விடத்தை விட்டு செல்ல முயற்சித்துள்ளாா்.

பொது இடத்தில் அரசு ஊழியரை அவதூறாகப் பேசியதற்காகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததற்காகவும் ஒரத்தநாடு அருகிலுள்ள பொன்னாப்பூா் கிழக்குக் கிராமத்தைச் சோ்ந்த ஏ. சரவணன் மீது ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →