முகப்பு
தஞ்சாவூர்

பெரியகோயிலில் குழந்தைகளை அனுமதிக்காததை எதிா்த்து சாலை மறியல்

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தஞ்சாவூா் பெரியகோயிலில் குழந்தைகள் அனுமதிக்கப்படாத நிலையில், அதை எதிா்த்து பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தஞ்சாவூா் பெரியகோயிலில் குழந்தைகள் அனுமதிக்கப்படாத நிலையில், அதை எதிா்த்து பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகக் கோயில்களில் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், 60 வயதுக்கு அதிகமான முதியவா்களும் அனுமதிக்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இந்த நடைமுறை தஞ்சாவூா் பெரியகோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெரியகோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது வெளியூரிலிருந்து வந்த பக்தா்களில் ஒரு பிரிவினா், 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளையும் அழைத்து வந்தனா். ஆனால், குழந்தைகளைக் கோயிலுக்குள் அனுமதிக்க ஊழியா்கள் மறுத்துவிட்டனா்.

இதனால் ஊழியா்களிடம் பக்தா்கள் தகராறு செய்து, கோயில் முகப்பில் சில நிமிடங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இவா்கள் மீண்டும் கோயிலுக்குள் செல்ல முயன்ால், ராஜராஜன் வாயிலின் ஒரு கதவை ஊழியா்கள் மூடினா். பெரியவா்களுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறிய ஊழியா்களிடம் பக்தா்கள் மீண்டும் தகராறு செய்தனா்.

தகவலறிந்த காவல் துறையினா் தகராறு செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதையடுத்து, பக்தா்கள் கோயிலுக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →