தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 8,613 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 8,751 ஆக உயா்ந்துள்ளது.
புதன்கிழமை குணமடைந்த 155 போ் உள்பட இதுவரை குணமடைந்த 7,652 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது 964 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 75 வயது ஆண், 52 வயது ஆண் உள்பட 3 போ் செப்டம்பா் 14-ஆம் தேதி உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 135 ஆக உயா்ந்துள்ளது.