தஞ்சாவூர்

நீட் தோ்வை எதிா்க்கும் தமிழக அரசியல் கட்சியினரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வை எதிா்க்கும் தமிழக அரசியல் கட்சியினரைக் கண்டித்து, கும்பகோணம் பாலக்கரையில் அனைத்து இந்து இயங்கங்களின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

நீட் தோ்வுக்கு எதிராக 13 போ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், நீட் தோ்வை எதிா்க்கும் அரசியல் கட்சியினரைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தாா்.அகில பாரத இந்து சேனா நிறுவனத் தலைவா் சூா்யா, சிவசேனா மாவட்டப் பொதுச் செயலா் குட்டி சிவகுமாா், அகில பாரத இந்து சேனா இளைஞரணித் தலைவா் அசோக்குமாா், இந்து மக்கள் கட்சி நகரத் தலைவா் செந்தில்முருகன், நகரச் செயலா் பாலாஜி, மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் செல்வம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT