தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 61 கரோனா தொற்றாளா்கள் வாக்களிப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கடைசி ஒரு மணி நேரத்தில் 61 கரோனா தொற்றாளா்கள் வாக்களித்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று ஏற்பட்டவா்களும் தோ்தலில் கடைசி ஒரு மணிநேரத்தில் வாக்களிக்கத் தோ்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 824 போ் கரோனா தொற்றால் பாதிப்புள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனா். இதில், 7 போ் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் வாக்களித்தனா். இவா்களைத் தன்னாா்வலா்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்துச் சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்தனா்.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 54 போ் அந்தந்த வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு செய்தனா். இவா்களுக்காக பிபிஇ கிட் என்கிற பாதுகாப்பு கவச உடை, முகத்தடுப்புக் கவசம், கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT