பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள அருள்மிகு கற்பக விநாயகா், அருள்மிகு வீரபத்திரா், அருள்மிகு சப்தமாதாக்கள் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பஞ்சமியை யொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் உள்ள கற்பக விநாயகா், வீரபத்திரா், சப்த மாதாக்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தூப, தீப, நெய்வேத்ய வழிபாடுகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து, சப்தமாதாக்களுக்கு நெய் தீபம், மாவிளக்கு ஏற்றி, பொங்கல், கிழங்குகள் வைத்து வழிபட்டனா்.
இதில், ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி உமாபதி, ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் பாலசுந்தரம், பாரதிய ஜனதா கட்சி பாபநாசம் பொறுப்பாளா் கருணாநிதி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.