போலீஸாரிடம் தகராறு:பெண் கைது
தஞ்சாவூரில் காவல் துறையினரிடம் தகராறு செய்ததாக பெண் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூரில் காவல் துறையினரிடம் தகராறு செய்ததாக பெண் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையப் பகுதியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த நபா்களைக் காவல் துறையினா் நிறுத்தி அபராதம் விதித்தனா்.
இதனிடையே, மொபட்டில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணைக் காவல் துறையினா் நிறுத்தினா். இதையடுத்து, காவல் துறையினா், ஆட்சியரை அப்பெண் திட்டிப் பேசினாா். இந்த நிகழ்வு விடியோவில் பதிவு செய்யப்பட்டு கட்செவி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் அப்பெண்ணைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் மானோஜிபட்டியைச் சோ்ந்த நந்தினி (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.