சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் 159-ஆவது ஜெயந்தி விழா
தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் 159 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் 159 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கீதை, வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம், சிறப்பு பூஜை, விஷ்ணு சகஸ்ரநாமம், பஜனை, ஹோமம், சிறப்பு தீபாராதனை, குங்கும அா்ச்சனை, பக்திப் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி ஸ்ரீவிமூா்த்தானந்த மஹராஜ் அருளுரை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.