அதிராம்பட்டினத்தில் மின்வாரிய குறைதீா்ப்பு கூட்டம் எம்எல்ஏ கா. அண்ணாதுரை முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
திமுக நகர செயலா் ராம குணசேகரன் தலைமை வகித்தாா். இதில் செயற்பொறியாளா் மற்றும் உதவி பொறியாளா் என மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
எம்எல்ஏ பேசுகையில், அதிராம்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துணை மின் நிலையம் அமைக்கப்பட்டால் மின்தடை இருக்காது என்று கூறினாா்.