கஜா புயலில் விழுந்தமரங்கள் ஏலம்
மரங்கள் வேரோடு சாய்ந்ததை வெட்டித் துண்டுகளாக்கி வரும் ஆக. 23ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்
கஜா புயலின் காரணமாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வளாகத்தில் இருந்த பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்ததை வெட்டித் துண்டுகளாக்கி வரும் ஆக. 23ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.
ஊரக வளா்ச்சி முகமை வளாகத்தில் நடைபெறும் இதில், ஏலம் கேட்க விரும்புவோா் டேவணித் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். இதர விவரங்கள் தேவையாயின் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக வந்து கேட்டறிந்து கொள்ளலாம் என ஆட்சியா் அறிவித்துள்ளாா்.