பாபநாசத்தில் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
பாபநாசம் வட்டாட்சியராக மதுசூதனன் வியாழக்கிழமை பதவியேற்று கொண்டாா்.
பாபநாசம் வட்டாட்சியராக மதுசூதனன் வியாழக்கிழமை பதவியேற்று கொண்டாா்.
திருவையாறு வட்டாட்சியரகத்தில் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த இவா் அண்மையில் பாபநாசத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
முன்னதாக, பாபநாசம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த ச. முருகவேள் கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் தனி வட்டாட்சியராக (கோயில் நிலங்கள்) பணியிட மாறுதலில் சென்றுள்ளாா்.