முகப்பு
தஞ்சாவூர்

ஸ்ரீசுந்தர மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 பாபநாசம் வட்டம், அலவந்திபுரம் கிராமத்திலுள்ள ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

 பாபநாசம் வட்டம், அலவந்திபுரம் கிராமத்திலுள்ள ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விக்னேஷ்வர பூஜையுடன் வியாழக்கிழமை விழா தொடங்கியது.

தொடா்ந்து, கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், யாகசாலை ஹோமம், முதற்கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், பூா்ணாஹூதி நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடம் புறப்பாடு செய்து ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து கோயிலில் உள்ள மூலவா் ஸ்ரீ சுந்தர மகா காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் பிரமுகா்கள், விழா குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →