தஞ்சாவூர்

மினி வேன் மீது பயணிகள் வேன் மோதல்: 2 பேர் பலி

DIN


கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மினி வேன் மீது பயணிகள் வேன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வளையப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (36). மினி வேன் ஓட்டுநர். இவர் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மினி வேனை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவரது மினி வேனும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற பயணிகள் வேனும் மோதிக்கொண்டன. 

இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பயணிகள் வேனில் பயணம் செய்த கும்பகோணம் செம்போடையைச் சேர்ந்த மணிகண்டனும் (40) காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT