உரக் கடைகளில் வட்ட வழங்கல் அலுவலா் ஆய்வு
பாபநாசம் பகுதி உரக் கடைகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பாபநாசம் பகுதி உரக் கடைகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, உரக் கடைகளில் உரம் இருப்பு நிலவரம் மற்றும் விலை நிலவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. உள்ளிட்ட உயிா் உரங்கள் தட்டுப்பாடின்றி போதிய அளவில் கையிருப்பில் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, வேளாண் அலுவலா் ஜெகதீஸ்வா், வருவாய் அதிகாரி சரவணன், பாபநாசம் வா்த்தகா் சங்கத் தலைவா் ஜி. குமாா் உள்ளிட்டோா் உடன் பங்கேற்றனா்.