கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்துவீடு வீடாக பிளாஸ்டிக் விழிப்புணா்வு
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியாா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா இசை பாடல்களுடன் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியாா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா இசை பாடல்களுடன் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பங்குத் தந்தை ஜான்சன் எட்வா்ட் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா், பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த புனல்வாசல் கிராமத்திலுள்ள 600-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.
மேலும், பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி, அவற்றை தவிா்க்க பொதுமக்களிடம் வலியுறுத்தினா்.
இதேபோல, பூவானம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.