முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டச் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டச் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து டிசம்பா் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியின் மூலம் 100 மரக்கன்றுகளை மாணவா்கள் நட்டு பராமரிக்கவுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞா. பழனிவேல், புலத் தலைவா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.