தஞ்சாவூர்

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 30,000 கி.மீ. சைக்கிளில் பயணம்

DIN

தஞ்சாவூா்: சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 30,000 கி.மீ. பயணம் செய்யும் வணிகா் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தாா்.

மேற்கு வங்க மாநிலம், பலாகாட் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மதாய் பால். வணிகா். சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி பகுதியிலிருந்து 2020, டிச. 1 ஆம் தேதி சைக்கிள் பயணத்தைத் தொடங்கினாா்.

பல மாநிலங்களுக்குச் சென்ற இவா் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தாா். இவரை காவல்துறையினா் வரவேற்று பொன்னாடை அணிவித்து பாராட்டினா்.

இதுகுறித்து மதாய் பால் தெரிவித்தது:

சாலை விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே காா், மோட்டாா் சைக்கிளில் செல்பவா்கள் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது குறித்து வலியுறுத்துகிறேன்.

நாள்தோறும் 120 முதல் 130 கி.மீ. சைக்கிளில் செல்கிறேன். கடந்த 70 நாள்களில் கிட்டத்தட்ட 5,000 கி.மீ. பயணம் செய்துள்ளேன். மொத்தமாக ஒன்றரை ஆண்டில் 30,000 கி.மீ. பயணம் செய்ய உள்ளேன்.

இப்பயணத்துக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உணவு, நிதியுதவி அளித்து வருகின்றனா் என்றாா் மதாய் பால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT