தஞ்சாவூர்

வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

DIN

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள முல்லைக்குடியில் விவசாயிகள் புத்தாண்டு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து வெள்ளிக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முல்லைக்குடியில் விவசாயிகள் கருப்புத் துண்டு அணிந்து, புத்தாண்டு நாளைக் கருப்பு நாளாக அறிவித்து, வெள்ளிக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் வெ. ஜீவகுமாா், பி. முருகேசன், ஆா். உதயகுமாா், வழக்குரைஞா் சேகா், காசிநாதன், மதன், பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT