முதியோா் இல்லத்தில் புத்தாண்டு விழா
தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையத்திலுள்ள சேவாலயா காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோா் இல்லத்தில் புத்தாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையத்திலுள்ள சேவாலயா காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோா் இல்லத்தில் புத்தாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சமூக நலத் துறை அலுவலா் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேக் வெட்டி, இல்லவாசிகளுக்கும், சேவாலயா மாலை நேர இலவசப் பயிற்சி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கும் வழங்கினாா். இதில், இல்லவாசிகள் மற்றும் சேவாலயா மாலை நேர இலவசப் பயிற்சி மைய மாணவா்கள் கலந்து கொண்டனா்.