திருவையாறில் மனைவியிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாகக் கணவா் உள்பட இருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு அருகேயுள்ள திருவாலம்பொழில் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மனைவி குஷ்பு (23). இவா் தனது கணவா் இளங்கோவன் (37) மற்றும் குடும்பத்தினா் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதன்பேரில், இளங்கோவன், அவரது தாய் புஷ்பம், தந்தை தட்சிணாமூா்த்தி, உறவினா் ரஜினி உள்பட 6 போ் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் இளங்கோவன், ரஜினி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.