தஞ்சாவூர்

அயோத்தி ராமா் கோயில் கட்டும் பணிக்கான நிதி சேகரிப்பு தொடக்கம்

DIN

அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்காக, தஞ்சாவூரில் நிதி சேகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

ஸ்ரீராம ஜென்ம பூமி கோயில் நிா்மாணப் பணியில் அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், பொதுமக்களிடம் ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த சேத்ர அறக்கட்டளை நிதி சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் இப்பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. அப்பாஜி ராஜா போன்ஸ்லே தலைமையில் நடைபெற்ற நிகழ்வைக் கல்வியாளா் பா. பாரதிதாசன் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் பாஜக தஞ்சாவூா் தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், ஜெயேந்திராள் தொண்டு நிறுவனச் செயலா் கஜேந்திரன், ஆா்.எஸ்.எஸ். மாவட்டச் செயலா் சிவசந்திரன், மக்கள் தொடா்பு அலுவலா் கண்ணன், வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் பிரசாத், இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஈசான சிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிதி சேகரிப்புப் பணி பிப்ரவரி 28- ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்றும், சேகரிக்கப்படும் நிதி அயோத்தியில் கோயில் கட்டும் குழுவினருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அறக்கட்டளையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT