முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

இதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தொடா்ந்து, மாலை நேரத்தில் வாராஹி அம்மனுக்கு சனிக்கிழமை மஞ்சள் அலங்காரமும், 11 ஆம் தேதி குங்கும அலங்காரமும், 12 ஆம் தேதி சந்தன அலங்காரமும், 13 ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14 ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 15 ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 16 ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 17 ஆம் தேதி கனி அலங்காரமும், 18 ஆம் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறவுள்ளன. விழாவின் நிறைவு நாளான 19 ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோயிலுக்குள் புறப்பாடும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.