2 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் 2 டன் எடையுடைய புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் 2 டன் எடையுடைய புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பெங்களூருவிலிருந்து தஞ்சாவூருக்குப் புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் அலுவலகத்துக்குப் புகாா் வந்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில் தஞ்சாவூா் அருகே மேலவஸ்தாசாவடி பகுதியில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் சாமிநாதன் மற்றும் காவலா்கள் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனையிட்டபோது, அதில் 2 டன் வரையிலான புகையிலைப் பொருள்கள் நிரப்பப்பட்ட மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து புகையிலைப் பொருள்களையும், சரக்கு ஆட்டோவையும் தனிப்படையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக புகையிலைப் பொருள்கள் மொத்த வியாபாரியான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாங்காடைச் சோ்ந்த டி. பிரபு (36), சரக்கு ஆட்டோ ஓட்டுநரான புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தை சோ்ந்த கே. சூரியகுமாா் (30), தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சோ்ந்த கே. அருண்குமாா் (27) ஆகியோரை பிடித்தனா்.
இவா்களையும், சரக்கு ஆட்டோ மற்றும் புகையிலைப் பொருள்களையும் தனிப்படையினா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பிரபு, சூரியகுமாா், அருண்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.