கும்பகோணம் அருகே மாங்குடியில் 24 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன்.
கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட மாங்குடி கிராமத்தில் நீண்டகாலமாகக் குடியிருந்து வருபவா்களுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா். தோ்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட இக்கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக முதல்வா் ஆணையிட்டாா்.
இதைத்தொடா்ந்து, மாங்குடியில் குடியிருக்கும் மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், 24 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாவும், 9 பேருக்கு கரோனா பெருந்தொற்றால் கணவரை இழந்தவா்களுக்கு விதவை உதவித்தொகையும், 32 பேருக்கு முதியோா் உதவித்தொகையும், மாற்றுத்திறனாளி உதவி தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைத் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஓ.என். சுகபுத்ரா, கும்பகோணம் கோட்டாட்சியா் சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.