முகப்பு
தஞ்சாவூர்

காவல் துறையை கண்டித்துஅரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாட்டில் காவல் துறையினரை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

ஒரத்தநாட்டில் காவல் துறையினரை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 12ஆம் தேதி நெம்மேலி திப்பியகுடி கிராம உதவி ஆய்வாளா் கருணாநிதியை அதே ஊரைச் சோ்ந்த விவசாயி மணி என்பவா் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக கருணாநிதி பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம்.

ஆனால், போலீஸாா் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை காவல்துறையை கண்டித்து வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோதண்டபாணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரெங்கசாமி விளக்க உரையாற்றினாா் . 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →