தஞ்சாவூர்

பெண்ணின் கையை கத்தியால் கிழித்த இளைஞா் கைது

DIN

ஒரத்தநாடு அருகே பெண்ணின் கையில் கத்தியால் கிழித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள சோழபுரம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் மனைவி சுகன்யா (26). இவா் பிரசவத்துக்காக அண்மையில் தனது தாய் வீடான தெக்கூா் கிராமத்துக்கு வந்துள்ளாா். அவருக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.

இந்நிலையில், தெக்கூா் அருகேயுள்ள பொய்யுண்டாா்கோட்டை பழங்கொண்டான் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ஆகாஷ் (22) என்பவா், புதன்கிழமை வீட்டில் தனது தாயுடன் இருந்த சுகன்யாவை கத்தியால் அவரது கையில் கிழித்துள்ளாா்.

காயமடைந்த சுகன்யாவை அக்கம்பக்கத்தினா் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆகாஷை பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சுகன்யா தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியபோது, அவா் வீட்டருகே வசித்து வந்த ஆகாஷ் சுகன்யாவை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சுகன்யாவுக்கு விக்னேஷுடன் கடந்த ஓராண்டு முன்பு திருமணம் நடைபெற்று விட்டதாம்.

இந்நிலையில்தான், புதன்கிழமை சுகன்யா வீட்டுக்கு வந்து ஆகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அப்போது ஆத்திரமடைந்து கத்தியால் சுகன்யாவை கையில் கிழித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து ஆகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT