முகப்பு
தஞ்சாவூர்

அனைவருக்கும் தடுப்பூசி போட வலியுறுத்தல்

அனைவருக்கும் முறையாக கரோனா தடுப்பு ஊசி செலுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சாா் ஆட்சியரிடம் காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

அனைவருக்கும் முறையாக கரோனா தடுப்பு ஊசி செலுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சாா் ஆட்சியரிடம் காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு இறப்புகளும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு தலைவா் நாகூா் கனி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினா், கரோனா தொற்று பாதிப்பால் இறந்தவா்கள் படங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தவாறு வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலசந்தரிடம் சென்று பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட சாா் ஆட்சியா், உடனடியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.