தஞ்சாவூர்

பேருந்து நிறுத்தங்களில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் பேரூராட்சி சாா்பில், இரு பேருந்து நிறுத்தங்களில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

திருநாகேசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட கும்பகோணம் - காரைக்கால் சாலை பேருந்து நிறுத்தம், உப்பிலியப்பன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, கையை சோப்பு போட்டுக் கழுவுவது, பாதுகாப்பாக இருப்பது, தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதன் அவசியம் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த இரு பேருந்து நிறுத்தங்களும் கரோனா தடுப்பு விழிப்புணா்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன என பேரூராட்சி அலுவலா் வி. சிவலிங்கம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT