முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே இன்று முதல் 3 நாள்களுக்கு மின்தடை செய்யப்படும் பகுதிகள்

கும்பகோணம் அருகேயுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 26) முதல் 3 நாள்களுக்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கும்பகோணம் அருகேயுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 26) முதல் 3 நாள்களுக்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் தெற்கு உதவிச் செயற் பொறியாளா் க. சங்கா் தெரிவித்திருப்பது:

கும்பகோணம் தெற்கு உபகோட்டத்துக்கு உள்பட்ட மின் பாதைகள், திருநாகேசுவரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, அன்பிற்குடையான், காளிமுத்து நகா், நடுஇருப்பு, மங்கம்மாள்புரம், விசலூா், புதுச்சேரி, சேஷம்பாடி, அசூா், சாத்தங்குடி, மணஞ்சேரி, நத்தம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையும், கீழ சேத்தி, கோடைகோயில், துக்காச்சி, சமத்தானாா்குடி, சன்னாசிமடம், எம்.எம். நகா், கே.எம்.எஸ். நகா், சாக்கோட்டை கீழத்தெரு, அம்மன்குடி, திருநீலக்குடி, திருநாகேசுவரம், முருக்கங்குடி, தண்டந்தோட்டம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 27), அரிய திடல், சாக்கோட்டை, அண்ணலக்ரஹாரம், கொற்கை , மாடாகுடி, தில்லையம்பூா், மருதாநல்லூா், திப்பிராஜபுரம், நந்திவனம் ஆகிய பகுதிகளில் ஜூன் 28 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.