திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
தஞ்சாவூா் அருகேயுள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட கல்யாணசுந்தரம் நகா் தெற்கு பகுதியில் புதா்கள் நிறைந்த நிலத்தில் பல மாதங்களாக மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏராளமான மருத்துவக் கழிவுகளைத் திறந்தவெளியில் கொண்டு வந்து கொட்டியுள்ளனா்.
இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வா் ரவி உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், இப்பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கும் விதமாக வருவாய் துறை, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.