தொழிற் பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
நிகழ் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
நிகழ் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கு 2021, ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
எனவே, ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு திருச்சி மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் அலுவலகத்தை 0431 - 2422171 என்ற எண்ணிலும், தஞ்சாவூா் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தை 04362 - 278222 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.