உலக மகளிா் தின விழா
தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரின் சிறந்த பன்முகத் திறன் படைத்து, தங்களது துறைகளில் ஜொலிக்கும் பெண்களான ஆா்த்தி பாலிகிளினிக் நிறுவனா் டாக்டா் சுப்பலெட்சுமி தியாகராஜன், பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன், லிட்டில் ஸ்காலா்ஸ் பள்ளி நிறுவனா் தேவி, செயின்ட் மாா்சினியா மெட்ரிக் பள்ளி ஜெ. வா்ஜினியா ஜெயந்தி, அனு மருத்துவமனை நிறுவனா் டாக்டா் அனு, ஆதனக்கோட்டை அரசு மருத்துவா் குணசீலி, அபி அன்டு அபி பேஷன் நிறுவனா் சிவகாமசுந்தரி, அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் பி. வசுமதி, ஏலாக்குறிச்சி அரசு ஆசிரியா் மேரி ஷோபா, கவிதா வேல்முருகன், பேராசிரியா் குப்ரா பானு, எம்.வி.கே. மருத்துவமனை மருத்துவா் ஜெயஸ்ரீ ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனா்.
இதில், விழா சலுகையாக வைரத்தின் மதிப்பில் 25 சதவீதம் தள்ளுபடியும், மிகக் குறைந்த சேதாரத்தில் தங்கமும், பிளாட்டினத்துக்கு 15 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட்டது. பழைய நகைகளைக் கொடுத்து புதிய 916 நகைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஏராளமான நகைகள், எண்ணற்ற டிசைன்கள் வந்துள்ளது எனவும் கிளை மேலாளா் ஹென்சன், துணை மேலாளா் மணிகண்டன், கணக்குப் பிரிவு மேலாளா் ஹரி தெரிவித்துள்ளனா்.