முகப்பு
தஞ்சாவூர்

ஒரத்தநாடு பகுதிகளில் ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்படும்

ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகளின் நலன்கருதி ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்படும் என்றாா் இத்தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகளின் நலன்கருதி ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்படும் என்றாா் இத்தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

ஒரத்தநாடு தொகுதியிலுள்ள பொய்யுண்டாா் குடிக்காடு, நெம்மேலி திப்பியகுடி, சோழன்குடிக்காடு, மேடையைக்கொல்லை, கிளாமங்கலம், சோழகன்கரை, தெற்குக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

ஏழை, எளிய மாணவ, மாணவிகள் ஐஏஎஸ் படிப்பதற்கு ஒரத்தநாடு பகுதியில் எனது சொந்த செலவில் புதிதாக ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில், பயிற்சி மையமும் அமைக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →