விதிமீறல்: கடைகளுக்கு சீல் வைப்பு
ஒரத்தநாடு பகுதியில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
ஒரத்தநாடு பகுதியில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
ஒரத்தநாடு ஒன்றியப் பகுதிகளில் கரோனா பொது முடக்க விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என கலால் உதவி ஆணையா் பழனிவேல் மற்றும் ஒரத்தநாடு காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணி ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தென்னமநாடு பைபாஸ் சாலையில் விதிகளை மீறி செயல்பட்ட பெட்டிக் கடைக்கு சீல் வைத்து ரூ. 500 அபராதமும், மேல உளூரில் விதியை மீறி செயல்பட்ட பாலாஜி பாத்திரக் கடைக்கு சீல் வைத்து ரூ. 1,000 அபராதமும், அதே ஊரில் உள்ள ஜலால் காலணி கடைக்கும் சீல் வைத்து ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.