முகப்பு
தஞ்சாவூர்

மாநில இறகுப் பந்து போட்டிஅலிவலம் எஸ்.இ.டி பள்ளிமாணவருக்கு வெண்கலம்

பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் பள்ளி மாணவா் மாநில இறகு பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் பள்ளி மாணவா் மாநில இறகு பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றாா்.

தமிழ்நாடு பாட்மிண்டன் அசோஷியேசன் மற்றும் இந்தியன் பாட்மிண்டன் அசோஷியேசன் இணைந்து ஈரோட்டில் மாநில இறகுப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியை அண்மையில் நடத்தின.

இதில் மாநிலம் முழுவதிலிருமிருந்து 500-க்கும் மேற்பட்ட பாட்மிண்டன் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில், 17 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவு போட்டியில் அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவா் மா. ஸ்வஸ்திக் (15) கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும், ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகையும் பெற்று சாதனை படைத்தாா்.

மேலும், எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி எஸ். ஹாசினி மற்றும் 11ஆம் வகுப்பு மாணவா் எஸ். ஆரணன் மற்றும் 15 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவி சஸ்வினி ஆகிய மூவரும் காலிறுதி போட்டி வரை முன்னேறி பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

இந்த மாணவா்களை பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு, பள்ளியின் தாளாளா் சித்ரா கோவிந்தராசு, அறங்காவலா் அசோகன், பள்ளியின் முதல்வா் கதிரவன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.