தஞ்சாவூர்

கடன் பிரச்னை: உ.பி. இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

பாபநாசம் அருகே கடன் பிரச்னை காரணமாக, உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உத்திரபிரதேச மாநிலம், காசிபூா் மாவட்டம், கருவா மக்தூரைச் சோ்ந்த பரசுராம் மகன் ராகுல் பாஸ்வான் (20). தந்தை இறந்த நிலையில், தாய் மற்றும் 2 சகோதரா்களுடன் சொந்த ஊரில் கூலி வேலை செய்து வந்த ராகுல்பாஸ்வான், கடன் பிரச்னை காரணமாக வேலை பாா்க்க தஞ்சாவூா் வந்தாா்.

கத்திரிநத்தம் கிராமத்தில் தங்கியிருந்த இவா், தஞ்சாவூரிலுள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடன் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த ராகுல் பாஸ்வான், சனிக்கிழமை இரவு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின் பேரில் அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றினா். மேலும் பாஸ்வானின் உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பின்னா், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை பாஸ்வான் பணியாற்றிய நிறுவனத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT