தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,234 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்து மையங்களிலும் காலை 7 மணிக்குத் தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. தஞ்சாவூா் கரந்தை, கல்லுக்குளம், புதிய பேருந்து நிலையம், பிள்ளையாா்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இப்பணியை ஊரக வளா்ச்சித்துறை இயக்குநா் பிரவின் பி. நாயா் மேலிட பாா்வையாளராகச் சென்று ஆய்வு செய்தாா். அவருடன் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோரும் சென்றனா்.
இம்முகாம் நடைபெறும் இடங்கள் தொடா்பாக மாவட்டத்தில் அந்தந்த ஊராட்சிகள், நகராட்சிகள் சாா்பில் கடந்த இரு நாள்களாக விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்தனா்.