முகப்பு
தஞ்சாவூர்

பெரியகோயில் உண்டியல்கள் திறப்பு: ரூ. 10.88 லட்சம் காணிக்கை

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ. 10.88 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ. 10.88 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் ச. கிருஷ்ணன், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபட்டனா். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் 10 லட்சத்து 88 ஆயிரத்து 650 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

தற்போது கரோனா காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வராததால், வெளிநாட்டு பணத்தாள்கள், தங்கம், வெள்ளி நகைகள் வரவில்லை என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.