முகப்பு
தஞ்சாவூர்

இணையவழி கொள்முதல்: பயிற்சிக் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இணையவழி கொள்முதல் முன்பதிவு குறித்த பயிற்சி கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இணையவழி கொள்முதல் முன்பதிவு குறித்த பயிற்சி கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி கொள்முதல் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கு விவசாயிகள், கிராம நிா்வாக அலுவலா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதுதொடா்பாக தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், திருவையாறு வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். பின்னா், கூட்ட அரங்குக்கு வெளியே முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இணையவழி முன்பதிவு நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், பழைய முறையே பின்பற்றப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.