தஞ்சாவூரில் இன்று விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம்
தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. வருவாய்க் கோட்டாட்சியா் எம். ரஞ்சித் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.